Homeசெய்திகள்உலகம்இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு: சூட்கேஸில் முதலை தலையைக் கடத்தி வந்த நபர் கைது!

இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு: சூட்கேஸில் முதலை தலையைக் கடத்தி வந்த நபர் கைது!

-

- Advertisement -

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ₹2.20 கோடி அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு.இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு: சூட்கேஸில் முதலை தலையைக் கடத்தி வந்த நபர் கைது!

இத்தாலியில் உள்ள காசெல்லே (Caselle) சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேஸிலிருந்து துண்டிக்கப்பட்ட முதலை தலையைக் சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய முதலை:
காசெல்லே விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரின் லக்கேஜ்களை அதிகாரிகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தினர்.

அப்போது, அவரது சூட்கேஸை எக்ஸ்-ரே மற்றும் உடற்கூறு சோதனை செய்தபோது, அதற்குள் பாதுகாக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு முதலையின் தலை கண்டெடுக்கப்பட்டது.

கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு:
முதலாளிகள் மற்றும் குறிப்பிட்ட முதலை இனங்கள் ‘அழியும் விளிம்பில் உள்ள வனவிலங்கு மற்றும் தாவர உயிரினங்களின் சர்வதேச வர்த்தக உடன்படிக்கை’ (CITES) கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உரிய அனுமதியின்றி அழியும் விளிம்பில் உள்ள உயிரினத்தின் பாகங்களைக் கடத்திய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட பயணி மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.2.20 கோடி அபராதம் அபாயம்:
இத்தாலிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, இவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சுமார் 2.20 கோடி ரூபாய் (சுமார் 2,50,000 யூரோக்கள்) வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து.. 5 பேர் பலி – 87 பேர் மாயம்…

MUST READ