spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

-

- Advertisement -

 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!
File Photo

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் நான்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக உருவாக்கப்பட்ட இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா – ஜனாதிபதி வருகை ரத்து

புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க மொத்த செலவு 970 கோடி ரூபாய் என மத்திய அரசு கணித்துள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டுமானம் செய்ய 26,000 டன் எஃகு மற்றும் 63,000 டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவையில் 544 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமர வசதிச் செய்யப்பட்டுள்ளது. மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

குடியரசுத் தலைவர் உரை போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக, மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு அமர்வுகள் நடைபெறும் போது, 1,280 கூட்டு அமர்வுகளில் அமரலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க, உரைகள் மற்றும் விவாதங்களின் மொழியாக்கங்களைக் கேட்க, நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த, நவீன வசதிகள், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

முழுக்க முழுக்க பசுமை கட்டிடமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

MUST READ