உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடல்- அண்ணா பல்கலை
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் ரோஸிமின் திலகர் அறிவித்துள்ளார். அதன்படி, ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நீக்கப்படுகின்றன.

வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பட்டுக்கோட்டை, திருக்குவளை 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.