spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலிரிசிஸ்ட் சிவகார்த்திகேயன் திரும்ப வந்துட்டாரு... இப்போ சூப்பர் ஸ்டார்க்காக!

லிரிசிஸ்ட் சிவகார்த்திகேயன் திரும்ப வந்துட்டாரு… இப்போ சூப்பர் ஸ்டார்க்காக!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிகர், பாடகர், தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் தற்போது பாடல் ஆசிரியராகவும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு இப்ப கல்யாண வயசு’, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் ‘செல்லம்மா செல்லம்மா’, விஜயின் பீஸ்ட் படத்தில் ‘அரபிக் குத்து’ உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதியுள்ள பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்‘ படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

we-r-hiring

தற்போது ரஜினி- நெல்சன் திலிப் குமார் கூட்டணியில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

ரஜினி இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார்.பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக இருக்கிறது.

எனவே இந்த படத்தின் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

MUST READ