spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் இந்தி படம்… நாக சைதன்யா உடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா!

ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் இந்தி படம்… நாக சைதன்யா உடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா!

-

- Advertisement -

புதிய ரீமேக் படத்திற்காக ஜோதிகாவும் நாகசைத்தன்யாவும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியில் கார்த்திக் ஆரியன், கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோரின் நடிப்பில் ‘பூல் புலையா -2’ எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ஒரு நகைச்சுவை திகில் திரைப்படமாகும்.

we-r-hiring

இப்படத்தை அனீஸ் பாஸ்மி இயக்கியிருந்தார். டி சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது மற்றும் சந்திப் சிரோத்கர் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இத்திரைப்படம் தமிழில் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், இப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும், நடிகர்கள் மற்றும் இயக்குனர் யார் என்று முடிவாகவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ‘பூல் புலையா 2’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் ஜோதிகாவும் கார்த்திக் ஆரியன் கதாபாத்திரத்தில் நாகசைத்தன்யாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பின்பு இது நாக சைதன்யாவின் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகையால் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ