நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரும் போர் தொழில் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியானது. அப்பளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வாரம் வெளியாகி இன்றுவரையிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.குறைந்த செலவில் உருவான ‘ தொழில்’ திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.
இந்த எதிர்பாராத வெற்றியை படக்குழுவினர் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இருவரும் போர் தொழில் படத்தில் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்காக ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
இந்த படம் கடந்த வாரம் வெளியாகி இதுவரை 13.5 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் வெளியான ஆதிபுருஷ் மற்றும் பொம்மை உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இனிவரும் நாட்களிலும் போர் தொழில் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.