spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…

திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…

-

- Advertisement -

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி லட்சித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார். தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம், வனத்துறை சார்பில் ரூ. 5 லட்சம் என ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

we-r-hiring

திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்று இருக்கலாம் என தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தேட தொடங்கினர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் இரவு நேரத்தில் பெற்றோருடன் நடந்து
சென்ற மூன்று வயது சிறுவனை சிறுத்தை தாக்கி வனப்பகுதியில் இழுத்து சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் ராட்சத விளக்கை திடீரென்று ஒளிரவிட்டதால் சிறுத்தை அந்த சிறுவனை விட்டு சென்றது.

படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட போலீசார் சிறுவனை திருப்பதியில் உள்ள தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ஒன்றரை மாத காலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அந்த சிறுவன் பின்னர் உடல் நலம் பெற்று வீடு திரும்பினான். தற்போது அதே பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்தது மலேயேறும் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது  என்பது குறிப்பிடதக்கது.நடைப்பாதையில் செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையாக செல்லும் படி கோவில் நிர்வாகம் அறிவுருத்தியுள்ளது.

 

MUST READ