spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தனது பெற்றோர்களுடன் சென்று, செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் போட்டியில், சென்னையை சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்யானந்தா, உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நார்வே நாட்டின் மேக்னஸ் கால்சனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிரக்ஞானந்தா

we-r-hiring

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றபின், இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. செஸ் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயரிய ஊக்கத் தொகையான 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார். தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரக்ஞானந்தா போர்த்தி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

MUST READ