spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகூகுள் பே போன்ற செயல்களில் பணத்தைக் கடனாகப் பெறும் வசதி!

கூகுள் பே போன்ற செயல்களில் பணத்தைக் கடனாகப் பெறும் வசதி!

-

- Advertisement -

 

கூகுள் பே போன்ற செயல்களில் பணத்தைக் கடனாகப் பெறும் வசதி!
File Photo

யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் கடன் வசதியையும் சேர்த்திருப்பது அவ்வகை பணப்பரிமாற்றங்களைப் பெருக உதவும் என யூகோ வங்கி நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செப்.13- ல் ‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!

கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிமாற்ற முறைகளில் ஒருவரின் வங்கிக் கணக்கில் உள்ள தொகைக்கு உட்பட்டு தான் பணம் அனுப்ப இயலும். ஆனால், இனி குறிப்பிட்ட தொகை வரை வாடிக்கையாளர்களுக்கு கடனாகக் கொடுக்க யுபிஐ நிர்வாகங்களுக்கு ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இதனால் யுபிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில், பணம் இல்லாவிட்டாலும் சிறிய தொகையை சேவையைத் தரும் நிறுவனம் மூலம் கடனாகப் பெற்று தங்கள் பணத்தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!

இந்த நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யூகோ வங்கியின் நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் விரிவடையும் என்றும், அதற்கேற்ப வங்கிகள் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

MUST READ