spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கடன் தராததால் கட்டிப்போட்டு கொள்ளை- வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை

கடன் தராததால் கட்டிப்போட்டு கொள்ளை- வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை

-

- Advertisement -

பணம் வைத்து இருந்தும் உதவ மனம் இல்லாததால் நண்பர் மூலமாக கூலிப்படை ஏவி கொள்ளை.சொந்த அக்கா மகனே, நண்பர்கள் மூலமாக கூலிப்படையை ஏவி கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.

வில்லிவாக்கம், சிட்கோ நகர், இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சோழன், 66. இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா வீட்டில் தனியாக வசித்து வருகிறார், இந்நிலையில், 22 ஆம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டதால், வனஜா கதவைத் திறந்தார்.

அப்போது, முகமூடி மற்றும் தலைகவசம் அணிந்து வந்த 5 மர்ம நபர்கள், உள்ளே நுழைந்து, தம்பதியரை கத்தி காட்டி மிரட்டி பின், பீரோவில் இருந்த 70 சவரன் நகை, 3.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து அவர்களை கைகளை கட்டிபோட்டு தப்பினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், சோழன் தன் மனைவி உதவியுடன் கட்டை அவிழ்த்து, அவரையும் விடுவித்து உள்ளார்.

we-r-hiring

நண்பர் மூலமாக கூலிப்படை ஏவி கொள்ளை.இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரித்தனர். விசாரணையில், சோழன் தங்கியுள்ள குடியிருப்பில் அவரது அக்கா மகன் ராமர், 45 என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.இவர்,அண்ணா நகரில் ஏஜேன்சி கடை நடத்தி வருகிறார்.இவரது நண்பர் மேற்கு முகப்பேரை சேர்ந்த முகமது பகுருதீன், 42. இவர் எல்.ஐ.சி.காலனியில் டைலர் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் டைலராக பணி செய்து வருபவர் கொரட்டூரை சேர்ந்த ராதா, 47. இவர் கணவரை இழந்து பண கஷ்டத்தில் இருந்து வந்தார்.முகமது பகுருதீன் வங்கியில் வீட்டு கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். வங்கி கடன் முறையாக கட்டமுடியாமல் நெருக்கடியில் இருந்ததால், வீட்டை விற்பனை செய்ய முயன்றார்.ராமர் உதவியுடன் சோழனிடம் வீட்டு விற்பனை செய்ய முயன்றனர். அவர் மறுக்கவே 5 லட்சம் ரூபாய் கடன் அளிக்கும் படி ராமர் தெரிவித்துள்ளார்.அதற்கும் சோழன் மறுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ராமர் மற்றும் முகமது பகுருதீன் மற்றும் ராதா ஆகியோர் சேர்ந்து சோழன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.அதன் படி, ஆவடியை சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்து, வீட்டை அடையாளம் காட்டியது தெரியவந்தது. இதையடுத்து, ராமர், 45, முகமது பகுருதீன், 42 மற்றும் ராதா, 47 ஆகிய மூவரை நேற்று வில்லிவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக சிசிடிவி காட்சியில் கொள்ளை கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளை அடித்து சென்றதும், கொள்ளை சம்பவம் அரங்கேற்றம் செய்வதற்கு முன்பாக பக்ரூதீன் மற்றும் ராதா இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து நோட்டமிட்டதும் , ராமார் வீட்டில் யாரும் இல்லாதவகையில் பார்த்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

நண்பர் மூலமாக கூலிப்படை ஏவி கொள்ளை.கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் பக்ரூதீன் உடன் ராமர் தொலைப்பேசியில் பேசியதை வைத்தும் போலீசார் கொள்ளை கும்பலோடு தொடர்பு இருப்பதை உறுதி செய்து கைது செய்துள்ளனர்.அவர்களிடம் இருந்து, 20.5 சவரன் நகை, 24 கிராம் வெள்ளி, 5 ஆயிரம் ரூபாய் இரண்டு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ