
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து சட்டமானது.

எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டமானது.
இந்த நிலையில், மகளிர் மசோதா குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சில ஆண்டுகள் வரை அமல்படுத்த முடியாத ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதால் என்ன பலன் என்று கேள்வி எழுப்பினார்.
நாள்தோறும் 1,000 முகாம் நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
நிச்சயமாக 2029- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகக் கூட, இந்த சட்டம் அமலுக்கு வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நாடகத்திற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
