கோலிவுட்டில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்து மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து, ரஜினிமுருகன், சீமாராஜா, எங்கவீட்டுப் பிள்ளை ஆகிய படங்களிலும் சிவகார்த்தியேனுடன் இணைந்து இமான் பணியாற்றி உள்ளார். அவர்களின் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றன.
இதைத் தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இமான் இசை அமைப்பதில்லை. இதனிடையே, இமானும் அவரது மனைவி மோனிகா ரிச்சர்ட்டும் விவாகரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து, அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இமான். இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு இமான் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்தில் பணியாற்றப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், காரணத்தை வெளிப்படையாக கூற முடியாத அளவு அவர் செய்துள்ளார் என்றும் இமான் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இமானின் முதல் மனைவி தனியார் பத்திரைக்கு அளித்துள்ள பேட்டி மேலும், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறியது, சிவகார்த்திகேயன் தங்களின் குடும்ப நண்பர் என்றும், குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் தெரிவித்தார். நானும், இமானும் பிரிந்திவிடக்கூடாது என அவர் சமாதானம் பேசினார். ஆனால், இமானுக்கு ஆதரவாக அவர் பேசாமல் நியாயமாக பேசியதால், சிவகார்த்திகேயன் மீது இமான் குற்றம் சாட்டியிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் ரொம்ப பாவம் என்றும் அவர் மிகவும் டீசண்ட்டான மனிதர் என்றும் மோனிகா விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் இமான் சாட்டியுள்ள குற்றம், திரையுலகில் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வாதத்திற்கான விஷயமாகவும் மாறியுள்ளது.