

இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயவு வழங்கியும், மூன்று காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் வடக்கு நகர் துணை காவல் ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி பிருந்தா பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆவடி காவல் ஆணையரக சட்டம்- ஒழுங்கு துணை காவல் அதிகாரியாக ஐ.பி.எஸ். அதிகாரி அய்மான் ஜமால் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
“வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை ரயில்வே காவல்துறைக் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி சுகுணா சிங், தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன், மதுரை கமாண்டன்ட்டாக ஐ.பி.எஸ். அதிகாரி பாஸ்கரன், தாம்பரம் காவல் ஆணையரக பள்ளிக்கரணை சட்டம்- ஒழுங்கு துணை காவல் ஆணையராக கவுதம் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.


