- Advertisement -
கணவன் மனைவியான அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.
‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன் தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
