spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅமீர் விவகாரத்தில் கார்த்தி மீது நடிகர்கள் கோபம்... கஞ்சாகருப்பு காட்டம்...

அமீர் விவகாரத்தில் கார்த்தி மீது நடிகர்கள் கோபம்… கஞ்சாகருப்பு காட்டம்…

-

- Advertisement -
கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் பருத்திவீரன். படம் வெளியான நாள் முதலே படத்தின் இயக்குனரான அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பொய் கணக்குகள் காட்டி பணத்தை மோசடி செய்து விட்டார் எனவும் அவருக்கு படம் எடுக்க தெரியாது என்றும் தொடர்ந்து பேசி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதனை அமீரும் மறுத்து அவ்வப்போது பதில் அளித்து வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதனால் இயக்குனர் அமீர் மிகவும் மனமடைந்து உண்மை தெரிந்தவர்களும் அமைதியாக உள்ளீர்களே என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார். இதனால் படத்தில் பணிபுரிந்த உண்மை அறிந்த பிரபலங்கள் அமீர் மீது எந்த தவறும் இல்லை என்றும் ஞானவேல் ராஜா தான் தேவை இன்றி பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றும் அமீருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். சமுத்திரக்கனி, சசிகுமார், பாரதிராஜா,கரு பழனியப்பன் என அனைவரும் அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல் ராஜாவை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டனர்.
தொடர்ந்து எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், அதில் அமீர் தன்னை காயப்படுத்தி பேசியதாக அவர் குறிப்பிட்டது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது கஞ்சா கருப்பு தனது கருத்தை வௌிப்படுத்தி உள்ளார். சினிமா விழாக்களுக்கு எங்கு சென்றாலும், என்ன மாமா சௌக்கியமா என கார்த்தி சொல்லிதான் பேச்சை தொடங்குவார் என்றும், அதை சொல்லிக்கொடுத்தது அமீர் என்பதை மறந்து விட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இனி இதை பேசாமல் மேடையில் ஏறும் தைரியம் இருக்கிறதா என கஞ்சா கருப்பு காட்டமாக பேசி இருக்கிறார்.

MUST READ