- Advertisement -
மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் கொரட்டூர் காவல் நிலையம் நீரால் சூழ்ந்து காவலர்கள் வெளியில் இருந்து பணிபுரியும் சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று அங்கு களப்பணியில் நீர் இரைத்துக்கொண்டிருந்த தொழிலாளிகளுக்கு உணவளித்து பின் காவல் நிலையத்தை பார்வையிட்டு உடனடியாக நீரை வெளியேற்றும் படி உத்திரவிட்டுள்ளார்.
அதன்பின் தொடர்ந்து மோட்டார் மூலம் நீர் இரைக்கப்பட்டு தற்போது காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் வெள்ள நீர் வடிந்து காணப்படுகிறது.
30-க்கும் மேற்பட்ட காவலர்கள் மின்னல் வேகத்தில் காவல் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.