‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மூத்த இயக்குனருடன் புதிய படத்தில் இணையும் மோகன்லால்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர், மேம்பட்ட உற்பத்திக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், குவால்காம் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெகட்ரான் நிறுவனத்துடன் ரூபாய் 1,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து!
பெகட்ரான் நிறுவனத்துடன் ரூபாய் 1,000 கோடிக்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.ரூபாய் 1,000 கோடியில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆலை மூலம் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
குடும்பங்கள் ரசிக்கும் வெப் சீரிஸ்….. சேரனின் ‘ஜர்னி’ அப்டேட்!
கோத்ரேஜ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் நிறுவன உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரூபாய் 515 கோடியில் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
டாடா நிறுவனம் ரூபாய் 12,082 கோடி முதலீடு!
கிருஷ்ணகிரில் உள்ள தனது மின் ஆலையை ரூபாய் 12,082 கோடியில் விரிவாக்கம் செய்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவன உற்பத்தி ஆலை விரிவாக்கத்தின் மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முக்கிய அறிவிப்பு!
ஹூண்டாய் நிறுவனத்துடன் ரூபாய் 6,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ரூபாய் 6,180 கோடியில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய, மின்சார வாகன கார், பேட்டரி தயாரிப்பு நிலையத்தை ஹூண்டாய் நிறுவுகிறது. சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் தாக் புத்தாக மையத்தையும் ஹூண்டாய் அமைக்கவுள்ளது.