சிவகார்த்திகேயன் பட நடிகைக்குத் திருமணம்… ரசிகர்கள் வாழ்த்து!
- Advertisement -
சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்தது.

தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு. இப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷிரிகாஞ்சவ்லா. இதன் பிறகு தமிழில் வால்டர் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். சந்தானத்துடன் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது தமிழில் மிஸ்டர் ஜூ கீப்பர், படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஷிரிகாஞ்சவ்லா சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக, ஏர் ஹோஸ்டஸாக பணி புரிந்து வந்தாராம்.

பின்னர், நடிப்பின் மீது ஆர்வத்தில் அந்த பணியை கைவிட்டு சினிமா பக்கம் திரும்பினார். மாடலிங் துறைக்குள் வந்து அதன் பிறகு நடிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது அவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அசார்முன் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணப் புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்களும் , நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.