
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.31) தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால், இதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணிகளின் கனிவான கவனத்திற்கு!
இதில் கூட்டத்தொடரின் போது, முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து அதற்கு ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.