- Advertisement -
பருத்திவீரன் படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை பிரியாமணி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், வாரிசு நடிகராகவும் வலம் வரும் நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த பெரும் புரட்சியை ஏற்படுத்தியது பருத்தி வீரன். இப்படத்தின் மூலம் தான் கார்த்தி நடிகராக அறிமுகம் ஆகினார். அமீர் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி, பிரியாமணி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே.ஈ.ஞானவேல்ராஜா இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தார். பருத்தி வீரன் திரைப்படம், தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று என்றே கூறலாம். முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பின் மூலம் முத்திரை பதித்தார் நடிகர் கார்த்தி.
