spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகை குறித்து கொச்சை பேச்சு... வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி...

பிரபல நடிகை குறித்து கொச்சை பேச்சு… வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி…

-

- Advertisement -
மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான த்ரிஷா, 20 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை முன்னணி நடிகையாக தன் இடத்தை தக்க வைத்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார். தமிழில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி, ரவி தேஜா, பிரபாஸ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். மலையாளத்திலும் இவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

தென்னிந்தி சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வரும் த்ரிஷா இறுதியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. திரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு மன்சூரும் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் த்ரிஷாக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டது. கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்பு படுத்தி, அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி ராஜூ பேசி இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது திரையுலகினர் மற்றும் அரசியல் அரங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதன்படி, தங்களின் நேர்மையை பறைசாற்ற வேண்டிய இடத்தில் யாரும் இல்லை, வாய்க்கு வந்தபடி அவதூறாக பேசுவதா என கேள்வி எழுப்பி இருக்கிறார். மன்சூர் அலிகான் பிரச்சனை முடிந்தநிலையில் மேலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்படி பேச யார் அதிகாரம் கொடுத்தது எனவும், எங்கிருந்த இந்த தைரியம் வந்தது எனவும் சரமாரியாக கேள்விகளை தொடுத்தார். இது தொடர்பாக ராஜூ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

MUST READ