spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த புதன்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.52,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 குறைந்து ஒரு சவரன் தங்கத்தில் விலை ரூ.52,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52.920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.88 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையானது இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ