Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி!

ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி!

-

- Advertisement -

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 27வது லீக் போட்டி நடைபெற்றது.  இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 27வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அதர்வா டைட் 15 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோ 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 10 ரன்னிலும் சாம் கரண் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாவது களமிறங்கிய அஷ்தோஷ் சர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது. பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது.

MUST READ