- Advertisement -
விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரும் வரும் அக்டோபர் மாதம் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிருமானவர் தனுஷ். இவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டர் சம்மதத்துடன்தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதி, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் அறிவித்தனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் முயற்சி செய்தனர்.
