spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇல்லத்தரசிகள் அதிர்ச்சி...ரூ.55,000ஐ நெருங்கும் தங்கம் விலை!

இல்லத்தரசிகள் அதிர்ச்சி…ரூ.55,000ஐ நெருங்கும் தங்கம் விலை!

-

- Advertisement -

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.6,725-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனையானது.

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்குகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ