Homeசெய்திகள்கட்டுரைஅம்பேத்கரை அவமதித்த அமித்ஷா... மோடிக்கு பதிலடி கொடுத்த ஒபாமா... வல்லம் பஷீர் அதிரடி!

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா… மோடிக்கு பதிலடி கொடுத்த ஒபாமா… வல்லம் பஷீர் அதிரடி!

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியுள்ளது அவரது உள்ளத்தின் வெளிப்பாடு என்றும், உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியுயம் என்றும் திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை எதிர்க்கட்சியினர் பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்று பதில் அளித்தார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கான காரணம் குறித்து திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் யூடியூப் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: – நீண்ட நாட்களாக ஒரு செய்தியை மறைத்து வைக்க உங்களுக்கு பெரிய மனோதிடம் தேவைப்படும். அந்த மன திடம் என்பது வெவ்வேறு நிகழ்வுகளில் வெளிப்பட்டு விடும். நாடாளுமன்றத்தில் ஒரு மிகபெரிய நெருக்கடியான சூழல் நிலவுகிறது. தன்னெழுச்சியாகவே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பலம் வந்துவிட்ட தோற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அன்றாட பிரச்சினைகளை பாஜக அரசு எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக 3.0 என பாஜக மிகவும் பெருமை பேசுகிறது. நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் முதல் மசோதாவே ஜேபிசிக்கு சென்றது. தற்போது 2வதாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் ஜேபிசிக்கு சென்றுள்ளது. ஜேபிசிக்கு மசோதாவை அனுப்புவதற்கான 3ல் இரண்டு பங்கு பெரும்பானைமை தேவைப்படும் நிலையில், அதுவும் பாஜக அரசுக்கு இல்லை. நெருக்கடியான நேரத்தில் எதை பேசுவது என்று தெரியாமல் அமித்ஷா பேசியுள்ளார். இது தான் உண்மையின் வெளிப்பாடு. இதை நீங்கள் எவ்வளவு நாளைக்கு ஒளித்துவைக்க முடியும். நாம் அம்பேத்கரை பேசுவதற்கும், கொண்டாடுவதற்கும், சமுகநீதி சிந்தனை கொண்டிருப்பவர்கள் அம்பேத்கரை பேசுவதற்கும், சனாதனவாதிகள் அம்பேத்கரை பேசுவதற்குமான வேறுபாடு இப்படித்தான் வெளிப்படும்.

எங்காவது ஒரு இடத்தில் கூட அம்பேத்கரிய, பெரியாரியவாதிகள் அவசரப்பட்டு தவறாக பேச மாட்டோம். அவர்களது லட்சிய வேட்கைகயை உள்வாங்கிக்கொண்டு, அதை கொண்டு அரசியலில் நகர்கிறோம். காங்கிரஸ் பேசவில்லை என்றாலும், நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அன்றைக்கு இருந்த இந்துத்துவ சிந்தனையாளர்கள் அம்பேத்கருக்கு எதிராக இயங்கினார்கள். யார் பக்கம் நிற்பது என்பதில் தான் நேருவுக்கு மிகப்பெரிய தடுமாற்றம் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது முழுக்க முழுக்க இந்துத்துவ எதிர்ப்பு, சமுக நீதியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அக்கட்சியின் தத்துவத்துக்கு எதிராக செயல்பட வைக்கும் வேலையை எப்போதும் இந்துத்துவ வாதிகள், சனாதனவாதிகள் அந்த கட்சிக்குள் இருந்தே அந்த வேலையை செய்வார்கள். பாஜகவினர் ஒரே இடத்தில் அம்பேத்கரை வேறுவிதமாக புரொஜெக்ட் செய்து கொண்டிருப்பார்கள். மகாத்மா காந்தி என்று அவர் சொல்ல மாட்டார். மிஸ்டர் காந்தி என்றுதான் சொல்லுவார். அதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என அடிக்கடி கடிதத்தில் கேட்பார் என தெரிவிப்பார்கள். காந்தியை எதிர்த்தார் அம்பேத்கர் என நிறுவார்கள்.

ஆனால் காந்தியை எதிர்த்த அம்பேத்கர், கோட்சேவை எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை. காந்தியின் படுகொலைக்கு பின்னர் நாகைக்கு அருகில் உள்ள சன்னாநல்லூரில் பெரியார் பேசுகிறார். அப்போது கூட்டத்தில் பேசிய பெரியார் அனைவரும் காந்தியை கொன்ற துப்பாக்கிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என  பேசுகிறார்கள். துப்பாக்கி வேறு, கோட்சே வேறா என்று கேள்வி எழுப்பினார். காந்தியார் குறித்த விமர்சனங்களை நேர்மறையாக வைத்தவர் அம்பேத்கர். ஆனால் காந்தியை விமர்சித்த அம்பேத்கரை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறிர்கள் என காங்கிரசுக்கு, பாஜக கேள்வி எழுப்புகிறது. அரிஜனங்கள் என்று அழைக்கக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னதை காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார்.

அம்பேத்கருக்கு காலதாமதமாக வழங்கிய பாரத் ரத்னா விருது - மக்களவையில் காரச் சாரமான விவாதம்

அம்பேத்கரை பாஜகவினர் இத்தனை நாளாக ஏதோ ஒரு வடிவமைப்புக்காக பயன்படுத்திக்கொண்டார்கள். என்ன காரணம் என்றால் ஒடுக்கப்பட்ட,  தாழ்த்தப்பட்ட மக்களை வைத்துக்கொண்டு தான் இந்துத்துவா அஜெண்டாவை நாடு முழுமைக்கும் செயல்படுத்த முடியும். அதைதான் தென்னிந்தியாவில் உள்ள தலைவர்கள் பல நாட்களாக பேசிக்கொண்டு இருப்பது என்னவென்றால் அதிகாரத்தை அவர்கள் வைத்துக்கொண்டு, அதற்கு குற்றேவல் புரிகின்ற வேலைக்கு உங்களை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் சிந்திக்க வேண்டாமா, படிக்க வேண்டாமா என பெரியார், அண்ணா, இடதுசாரிகள் என அனைத்து தலைவர்களும் கேட்டனர். பாஜக எங்கே நுட்பமாக அம்பேத்கரை கொண்டாட தொடங்குகிறது என்றால், தேசிய அடையாளத்தில் சேர்க்கிறது.

அம்பேத்கர் இடஒதுக்கீடு குறித்து பேசும்போது, தேசியம் குறித்து பேசுகிறார். சாதி கோட்பாடுகள் எப்போது அடியோடு தகர்க்கப்படுகிறதோ அப்போது தான் இந்த தேசம் இந்தியா என்ற ஒருநாடாகும் என்றார். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்து அம்பேத்கர் எங்காவது ஒரு இடத்தில் பேசியுள்ளாரா? காலம் முழுக்க அம்பேத்கர் எதை எதிர்த்து பேசினாரோ, எதை எதிர்த்து இயங்கினாரோ? அந்த சித்தாந்தத்தை கொண்டவர்கள் அம்பேத்கரை கொண்டாடுவது போல நடித்தார்கள். அந்த நாடகம் நிறைவு பெற்றுள்ளது என்று தான் நான் கருதுகிறேன்.

அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அற்புதமான பதிலடி கொடுத்துள்ளார். பாவம் செய்பவர்கள் தான் புண்ணியத்தை குறித்து கவலைப்பட வேண்டும். நாங்கள் ஏன் அது குறித்து கவலைப்பட வேண்டும் என்று முதலமைச்சர் பதில் அளித்திருந்தார். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை நாங்கள் தான் கொண்டாடினோம் என்கிறீர்கள், அம்பேத்கரை எங்கள் அளவுக்கு யாரும் கொண்டாடவில்லை என்று கூறுகிறீர்கள். அம்பேத்கரை பேரை சொல்வதால் உங்களுக்கு என்ன பிரச்சினை. இதனால் நீங்கள் பெருமைப்படத்தான் வேண்டும். இவங்ரகள் உள்ளக்கிடக்கையில் என்ன செய்திகளை வன்மத்தோடு இத்தனை நாட்கள்  நாட்கள் அடைத்து வைத்திருந்தார்களோ அதை இன்றைக்கு அமித்ஷா வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், மோடி அதை நியாயப்படுத்தி பேசி இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி ஏற்பு காணொலியை பிரதமர் மோடி பார்க்க வேண்டும். அம்பேத்கரை போல கீழ் நிலையில் உள்ளவர்கள் மேல்நிலைக்கு வர வேண்டும் என்ற உத்வேகம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது என ஒபாமா தெரிவித்திருந்தார். கீழ் நிலையில் ஒருவர் எவ்வளவு அழுத்தப்பட்டிருந்தாலும், அந்த வகுப்பில் இருந்து ஒருவர் மேலே வர வேண்டும் என்பதற்கு என் வழிகாட்டியாக இருந்தவர் அம்பேத்கர் என்கிறார். அந்த வழியை பின்பற்றித்தான் இந்த இடத்திற்கு வந்தேன் என்றார். அந்த அம்பேத்கரை இழிவு படுத்தியவரை தான் நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். உலக நாடுகளுக்கு இந்த செய்தி போகாதா?

ஜனநாயக கட்சி: கமலா ஹாரிஸுக்கு ஒபாமா வாழ்த்து

பூனா உடன்படிக்கையில் அம்பேத்கருக்கு, காங்கிரஸ் துரோகம் செய்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். பட்டியல் இன மக்களுக்கு வாக்குரிமையே கூடாது என்று வாழ்நாள் முழுவதும் கூறியவர்கள் இந்து மகா சபையினர். 1927 அம்பேத்கர் ஒரு தனி அமைப்பை தோன்றி எதற்காக போராடுகிறார் என்றால், இறந்துபோன மாடுகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தூக்கிசெல்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். பேரணியின்போது அம்பேத்கர் வழியில் உள்ள குளத்தில் தண்ணீர் அருந்தினார். அதனால் இந்து மகாசபையினர் அந்த குளத்தில் தீட்டுக் களித்தனர். இதனை அறிந்து ஆத்திரமடைந்த அம்பேத்கர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அப்போது, ஒரு மனிதன் இறங்கி தண்ணீர் குடித்தால் தண்ணீர் தீட்டாகும் என்பதற்காக மாட்டின் கழிவை கலந்தார்களே, இவர்களின் மண்டையில் இருப்பது மூளை அல்ல மாட்டின் கழிவுதான் என்று கூறினார். இதைவிட இந்து மகா சபையினரை அம்பேத்கர் எதிர்த்தார் என்பதை சொல்லிவிட முடியுமா?. பூனா ஒப்பந்தத்தில் காங்கிரஸ் துரோகம் செய்தது என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். திரை மறைவில் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் மூட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

நெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்

அரசியலமைப்பு சட்டத்தை வடிமைப்பதற்கான முதல் கூட்டத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி கலந்துகொண்டுவிட்டு, 2வது கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏன் அவர் கலந்து கொள்ளவில்லை. காரணம் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வரவில்லை. பின்னாளில் ஒரு தலைவர் வருவார், என்னுடைய கனவு நிறைவேறும் என அம்பேத்கர் தெரிவித்தார். இவர்கள் எந்த கட்டத்திலும் அம்பேத்கரின் முடிவுகளுக்கு ஆதரவாக நின்றவர்கள் இல்லை. மாறாக அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் மூட்டுகின்ற வேலையைத்தான் இந்துமகா சபா செய்து கொண்டிருந்தது.

மதன் மோகன் மாளவியா, ஷியாமபிரசாத் முகர்ஜி, லாலா லஜபதிராய் போன்றோர்,  காங்கிரஸ் கட்சிக்குள்ளும், இந்து மகாசபையிலும் இருந்துகொள்வார்கள். மிகவும் அழகாக அவர்கள் செய்த அம்பேத்கர் எதிர்ப்பு பரப்புரையை காங்கிரஸ் கட்சியின் மீது தூக்கி போட்டுவிடுவார்கள். கேட்டால் காங்கிரஸ் கட்சிதான் எதிர்த்தது என்பார்கள். அதனை தான் அமித்ஷா வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது இவ்வளவு நாள் அம்பேத்கர், அம்பேத்கர் என பேசியது மனதில் இருந்து பேசியது அல்ல.

உங்களுக்கு அம்பேத்கரை ஏன் பிடிக்கும்?
டாக்டர் அம்பேத்கர்

கொள்கை ரீதியாக அம்பேத்கரை ஏற்றுக்கொண்டிருந்தால் ஒவ்வொரு முறையும் அம்பேத்கர் பெயர் உச்சரிக்கப்படும்போது, உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டாமா? மாறாக உங்களுக்கு வயிறு எரிகிறது போன்று அல்லவா உங்களது செயல்கள் உள்ளன. வலதுசாரி சிந்தனைக்கு எதிராக கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றால் உங்களை உந்தித்தள்ளுவது பெரியாரும், அம்பேத்கரும் ஆகத்தான் இருப்பார்கள். நாம் கோட்சேவையும், அம்பேத்கரையும் எவ்வளவு தூரம் தள்ளிவைத்து பார்க்கிறோமோ, அவ்வளவு தூரம் அவர்கள் அம்பேத்கரை தள்ளிவைத்து பார்க்கின்றனர். அவர்களுக்கு ஒரு அரசியல் தேவைப்பட்டது. இந்த மலிவான அரசியலை இடதுசாரிகள் கொண்டாட மாட்டோம். வெட்கம், மானம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அம்பேத்கரை கொண்டாடுகிறார்க்ள். வாக்குக்காக, அதிகாரத்துக்காக எதையும் விற்கத் துணிந்த கொள்கை இல்லாத கூட்டமாக மாறி இருக்கிறீர்கள் என்பதை நாடாளுமன்றத்தில் அமித்ஷாவே, அவருடைய வாயால் ஒப்புதல் வாக்குமுலம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ