சரத்குமார் வழியில் பாமகவை பாஜகவில் இணைத்துவிட்டு, மனைவி சவுமியாவுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை வாங்கிவிடலாம் என அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் – அன்புணி மோதல் மற்றும் அன்புணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இன்றைக்கு செயற்குழுவை கூட்டி, நிர்வாகிகள் இடையே பேசியுள்ளார். மருத்துவர் ராமதாசுக்கு இப்போதைக்கு பிடிக்காத வார்த்தையாக மாமா என்ற வார்த்தை மாறிபோய் விட்டது. அதற்கு காரணம் சவுமியா அன்புமணிதான். அவர் மாமா, மாமா என்று சொல்லியே ராமதாசை டார்ச்சர் செய்தது மட்டும் இன்றி, ராமதாஸ் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ஒரு விஷயத்தை சொல்கிறார்.
50 ஏக்கர் பரப்பளவிலான தைலாபுரம் தோட்டத்தை விட்டே ராமதாஸ் தலைமறைவாகி இருக்கிறார். அதையும் கண்டுபிடித்து அங்கே வந்து கதவை தட்டியுள்ளார் சவுமியா அன்புமணி. சில இடங்களில் மாமியார் மருமகள் சண்டையிட்டு சாகடிப்பார்கள். ஆனால் இந்த குடும்பத்தை பொறுத்தவரை மருமகளால் மாமனார் செத்து சுண்ணாம்பு ஆகிக் கொண்டிருக்கிறார். மாமா என்று சத்தம் கேட்டாலே ராமதாஸ் அலறி அடித்துக்கொண்டு ஓடக்கூடிய நிலைதான் உள்ளது என்று நாம் சொல்லவில்லை. அவரே செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார்.
தற்போது மருத்துவர் ராமதாசுக்கு மற்றொரு தலைவலி யார் என்றால் பாமா… இவர் யார் என்று பார்த்தால் சொந்தக்கார பெண். பொருளாளராக போடலாம் என்று நியமித்தால் அந்த அம்மா தந்தை போன்று இருக்கக்கூடிய ஐயா ராமதாசை விட்டுவிட்டு அண்ணன் போன்று இருக்கக்கூடிய அன்புமணியின் பின்னால் சென்றுவிட்டார். ஒரு பக்கம் மாமா என்று ஒரு சத்தம்… மற்றொரு பக்கம் அப்பா என்கிற சத்தம்… அப்போது பாமகவில் இருக்கிற தலைவர், பொருளாளர் அவுட், யார் செயலாளர் என்று யாருக்குமே தெரியாது. இவர்கள் எல்லாம் போய்விட்டால் ராமதாசுக்கு என்ன இருக்கிறது?
நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் சொல்கிறார், அன்றைக்கே நான் செத்துவிட்டேன் என்று. 108 மாவட்ட செயலாளர்கள்ள இருக்கிறார்கள். அவர்களில் 8 பேர் தான் வந்தார்கள். பாதிக்கு பாதி பேர் வந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் 8 பேர்தான் வந்தார்கள். அன்றைக்கே நான் செத்துவிட்டேன் என்று சொல்கிறார். அப்போது எவ்வளவு மனவேதனை இருக்கும் என்று பாருங்கள்.
தற்போது பாமபாஜக. அதாவது பாட்டாளி மக்கள் பாரதிய ஜனதா கட்சி. தற்போது இதுதான் செயல்பாட்டில் இருக்கக்கூடிய பாமக. பாமகவை மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். தற்போது அன்புமணி வைத்திருக்கக்கூடிய பாமக என்பது, பாட்டாளி மக்கள் பாரதிய ஜனதா கட்சியாக மாறிவிட்டதாக தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அதற்கு பணம் ஒரு காரணமாக இருந்தாலும், உயிர் பயம். சிறைக்கு செல்வோம் என்கிற அச்சத்தில் அன்புமணி அந்த பக்கம் சாய்ந்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் சரத்குமார் என்கின்றனர். அன்புமணி தனது குருநாதராக யாரை பார்க்கிறார் என்றால் சரத்குமாரை பார்க்கிறார்.
ஒரு சிறிய கட்சியை நடத்தி, ஒரு அமெளண்டுக்கு விற்பனை செய்துவிட்டு, அந்த கட்சியிலேயே அடைக்கலமாகி சந்தோஷமாக இருக்கிறார். அதேபோல் நாமும் பாமகவை, பாஜகவுடன் இணைத்து பாமபாஜக என்று மாற்றிவிட்டோம் என்றால் மனைவி சவுமியா அன்புமணிக்கு சீட்டு வாங்கி, அவர்களை மத்திய அமைச்சராகவோ அல்லது எம்.பி. ஆகவோ மாற்றிவிடலாம் என்கிற நிலைக்கு அன்புமணி வந்துவிட்டார். அதற்கு காரணம் ராமதாசை மாமா என்று அழைக்கக்கூடிய அந்தஸ்தில் உள்ள பெண்மணி ஆவார்.
இன்றைக்கு பாமக செயற்குழுவில் பேசிய அன்புமணி, தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் அதிக கொள்கைகள் கொண்ட கட்சி பாமக தான். அய்யா ராமதாஸ் உருவாக்கிய கொள்கையை பின்பற்றி வழிநடப்போம் என்று சொல்கிறார். அய்யா சொல்கிற கொள்கையை மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டு, அவரது கொள்கையை பின்பற்றுகிறாம். பாஜகவில் போய் கூட்டணி சேர்ப்பதுதான் அய்யாவின் கொள்கை? இல்லை பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து வடநாட்டவர்களுடன் இணக்கமாக வாழ்வதுதான் அவருடைய கொள்கையா? செய்வது எல்லாம் செய்துவிட்டு, அய்யா தலையில் போடுகிறார். இதனை தான் ராமதாஸ், அன்புமணி வாயை திறந்தால் பொய்தான் சொல்கிறார் எனும்போது எவ்வளவு வேதனை பட்டிருப்பார்.
முதலில் மாமா என்ற வார்த்தையை கேட்கக்கூடாது என்று ராமதாஸ் நினைத்திருந்தார். இன்று முதல் பாமா என்ற வார்த்தையையும் கேட்கமாட்டார். தாங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், அய்யா பற்றி எல்லாம் கேட்காதீர்கள் என்றும் திலகபாமா சொல்கிறார். அப்போது தங்களை கேட்க ராமதாஸ் யார்? என்று தான் சொல்கிறார். பாமபாஜக என்றால், பாமக சௌமியா(சௌ) அணியாகும். எடப்பாடியாருடன் கூட்டணி சேர வேண்டும் என்று ராமதாஸ் சொல்கிறார். பாஜகவுடன் சேர வேண்டும் என்று அன்புமணி பாமகவை அடகுவைத்து விட்டார். இயற்கையாகவே என்ன ஆகிறது என்றால் அதிமுகவுடன் பாஜக சேர்ந்தால், 2 பேரும் அந்த கூட்டணியில் தானே இணைய போகிறார்கள். எடப்பாடியார் ஒரு மிகப்பெரிய பரீட்சை வைத்துள்ளார். அய்யாவா, அன்புமணியா என்று ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.