பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது போல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒருபோதும் அமையாது என்றும், அவர் ஊடக வெளிச்சத்திற்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரபல இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் 2026 சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி ஏற்படும் என்றும், நிச்சயம் கூட்டணி ஆட்சித்தான் அமையும் என்றும் தெரிவித்திருந்தார். அண்ணாமலை பேட்டியின் பின்னணி மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். இது அவரது இயலாமையா? அல்லது திசை திருப்பும் செயலா? என்று தெரியவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூட்டணி குறித்து பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்றும், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. அதற்குள்ளாக எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படும் என்று கூறி இருந்தார். இதனை அடிப்படையாக கொண்டு அதிமுக – பாஜக கூட்டணி வருமா? என பத்திரிகைகளில் கேள்வி எழும்பியது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்து விட்டார். அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் கடந்த 2 நாட்களாக டெல்லியில் அமித் ஷாவை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மீது காங்கிரசும், காங்கிரஸ் மீது பாஜகவும் ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கூட இந்திய கூட்டணி கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின. இந்த விவகாரத்தில் எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். அமித்ஷா தனது பேச்சை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி விட்டதாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலை ஏன் இதை இப்போது சொல்கிறார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை, அண்ணாமலை மீது வருத்தத்தில் உள்ளார். தென் சென்னை தொகுதியில் தன்னை தோற்கடித்ததே அண்ணாமலைதான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டியும் கூட அண்ணாமலை பேட்டிக்கு ஒத்துக்கொண்ட நேரமும், தலைப்பும் வேறு. பேட்டிக்குள் சென்றதும் அவர் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு அரசியல் பேசி, கூட்டணியை நோக்கிய பயணம் இல்லை, ஐந்து முனை போட்டிதான். யார் வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் என மொத்தமாக வேற டைவர்ஷன் கொடுக்கிறார். முன்னர் அமித்ஷா பேச்சில் தவறு இல்லை என்றார். அவரது பேச்சு காட்டுத்தீ போல நாடு முழுவதும் பரவியது. இது வட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. உத்தர பிரதேசம், பீகாரில் அம்பேத்கர் மிகவும் முக்கியம். உத்தரபிரதேசத்தில் முதன் முறையாக தலித் முதல்வராக மாயாவதி வந்தார். அப்போது பாஜக துணையாக இருந்தது. மாயவதி கன்ஷிராமின் சிஷ்யை, அவர் ஒரு இயக்கவாதி. மாயாவதி இயக்க அரசியலில் இருந்து, தேர்தல் அரசியலுக்கு மாற அரசியல் உரையாடல் முலம் கட்டமைத்தார்.
அரசியல் கட்டமைப்பை மாற்ற தமிழ்நாட்டில் அண்ணாமலை தவறாக செய்வதாக கருதுகிறேன். அவர்தான் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் உள்ளது என்று தெரிவித்தார். கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் இப்பவே எந்த கட்சிக்கும் தேவையில்லை. அதிமுக ஏன் செய்தது என்றால், அந்த கட்சி பாஜக கூட்டணிக்கு செல்லும் என சொல்லப்பட்டபோது ஒரு வாக்குவங்கியை கட்டமைக்க முயற்சி செய்தது. திமுகவுக்கு எதிரான வாக்குகள் பாஜகவுக்கு செல்லாமல் அதனை அதிமுகவுக்கு வரவும், பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு முழுமையாக போகக் கூடாது என்று முயற்சி செய்தது. அந்த கட்டமைப்பை செட் செய்தது. கடந்த தேர்தலிலும் அவர்கள் கூட்டணியில் இல்லை. பாஜக – அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு என கூறப்பட்டபோது அதை அதிமுக மறுத்து வந்தது. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டது. அண்ணாமலை கூட்டணி மேலிடம் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என தெரிவித்து விட்டார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு, இந்த விவகாரத்தில் தேசிய தலைமை அதற்குள்ளாக முடிவு செய்துவிட்டதா? என கேள்வி எழுப்புகிறது. பாஜகவுக்கு தற்போது தலைவரே கிடையாது. நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது. அண்ணாமலை சம்பந்தமே இல்லாமல் பேட்டி கொடுத்துள்ளார். டிஜிட்டல் பேட்டிக்கு கொடுத்தார். டிஜிட்டல் சப்ஜெக்ட் வேறு. மெயின் ஸ்டரீம் மீடியாவில் பேட்டி கொடுக்கும் போது காரசாரமாகவும், அதேவேளையில் ஒரு நேரேட்டிவ்வை செட் செய்யும் விதமாக பேட்டி அளிக்க வேண்டும். இது மெயின்ஸ்டரீ மீடியா பேட்டியாக அது மாற்றப்பட காரணம். அண்ணாமலை கொடுத்த பேட்டி. அந்த பேட்டி கார சாரமாக இருக்க வேண்டும் என அண்ணாமலை திடீரென முடிவு எடுக்கிறார். அதற்கு டெல்லி தலைமை ஒப்புதல் அளித்திருக்க முடியாது. டெல்லி ஒரு அழுத்தத்தில் உள்ளது. எனவே அண்ணாமலை நமது அஜெண்டாவை புஷ் பண்ணலாம் என நினைத்திருப்பார். அவருக்கு கூட்டணியில் உடன்பாடு இல்லை. அவர் நான் ஒரு கட்சியின் தலைவர், தனது கட்சியை பதவிக்கு கொண்டு வருவதுதான் எனது விருப்பம் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
அண்ணாமலை தனது பேட்டியில் அதிமுக, தவெக உடன் கூட்டணி இல்லை என்றும், 5 முனை போட்டி உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சிகள் தனித்தனியாக உள்ளது திமுகவுக்கு பலம் என்று சொல்ல மாட்டேன் என்கிறார். ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து கிடந்தால் அது ஆளுங்கட்சிக்கு நன்மைதான். ஆனால் தமிழ்நாட்டில் இதனை மீறிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு ஓட்டு வங்கி இருந்தது. அதுவும் 4 முனை போட்டியாக பிரிந்தது. வாழப்பாடி ராமமூர்த்தி பாமக தலைமையில் ஒரு அணி, மதிமுக வைகோ தலைமையில் சிபிஎம் ஒரு கூட்டணி, தாய் காங்கிரஸ் ஒரு அணி, திமுக – த.மா.கா ஒரு அணி, அண்ணா திமுக ஒரு அணி. ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் நின்றபோது டி.ராஜேந்தர் அவரது எதிர்ப்பு வாக்குகளை பிளவு படுத்தினார். அவர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது என்ன நினைக்கப்பட்டது என்றால் ஜெயலலிதா ஜெயித்து விடுவார், மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து விடும் என்று எண்ணப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் ஜெயலலிதாவே தோற்றுவிட்டார். அக்கட்சிக்கு 4 இடங்கள் மட்டும்தான் கிடைத்தது. அந்த அளவுக்கு ஒரு வெறுப்பு இருந்தது. இந்த முறை 5 முனை போட்டியாக இருந்தாலும், மக்கள் திமுகவுக்கு அடுத்த இடத்தில் உள்ள கட்சியைத்தான் தேர்வு செய்வார்கள். ஒரு கட்சியை தோற்கடிக்க முடிவு செய்துவிட்டால், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள கட்சியைத்தான் தேர்வு செய்வார்கள். தமிழ்நாட்டில் அந்த இடத்திற்கு பாஜக இன்னும் வரவில்லை.
அதிமுக – பாஜகவுக்கு சென்றால் அழிவுதான் என்று நினைக்கிறது. ஆந்திராவில் பாஜக – பவன் கல்யாண் இடையே கூட்டணி அமைந்தது பெரும் சிக்கலாக மாறியுள்ளது. பவன் கல்யாணை துணை முதலமைச்சராக ஆக்கிய பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரிய தலைவலியாக மாறிள்ளார். உள்துறை அமைச்சர் மீதே குற்றம்சாட்டுகிறார். கப்பலை திடீரென ஆய்வு செய்து, அதனை கைதுசெய்ய உத்தரவிடுகிறார். இதற்கு காரணம் பாஜக அடுத்த தேர்தலில் பவன் கல்யாணுடன் கூட்டணி வைத்து, தெலுங்கு தேசத்தை வீழ்த்த வேண்டும் என எண்ணுவது தான். ஒவ்வொரு கட்சியும், தனது விருப்பங்களுக்காக உழைக்கும். தனியாக ஆட்சி அமைக்க நாளாகும், என்பதால் இப்போது கூட்டணி அமைப்போம் என்கிறார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி, டிடிவி ஆகியோரும் இதே கருத்தைத்தான் சொல்கிறார்கள். ஆனால் பாஜகவின் மேலிட தலைவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?. தமிழிசை சவுந்தரராஜன், வானதி போன்றோரால் மீண்டும் எம்.எல்.ஏ ஆக முடியுமா?. மக்கள் செல்வாக்கு மிகுந்த நைனார் நாகேந்திரனே மீண்டும் எம்எல்ஏ ஆக அதிமுக-வின் வாக்கு வங்கி தேவை. அதற்கு அதிமுக உடன் சுமூகமான கூட்டணி இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அண்ணாமலை தனது தனிப்பட்ட அஜெண்டாவுக்கு, மேலிடத்தின் ஆசியோடு நடைபெறுவது போன்ற பிரமையை கட்டமைக்க முயற்சிக்கிறார்.
டெல்லியில் இருந்து அமித் ஷாவோ, மோடியோ தமிழ்நாட்டை குறித்து யோசித்திருக்க கூட மாட்டார்கள். அண்ணாமலை ஒரே நேரத்தில் டபுள் செக் வைக்கிறார். தனது கூட்டணியில் உள்ள கட்சியினருக்கும் செக் வைக்கிறார். தன்னுடைய கட்சியில் உள்ள மூத்த தலைவர்களான தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்.ஆர் போன்றோருக்கும் செக் வைக்கிறார். அண்ணாமலை ஒரு மறைமுக அஜெண்டாவுடன் தான் அரசியல் செய்கிறார். அண்ணாமலை கூற்றுப்படி தமிழ்நாட்டில் 5 முனை போட்டி வருமா என்றால் நிச்சயம் வரும். ஆனால் கூட்டணி ஆட்சி அமையுமா? என்றால் நிச்சயம் அமையாது. ஏனென்றால் அண்ணாமலையின் கருத்துக்கு நிச்சயமாக டெல்லி தலைமை சம்மதம் தெரிவித்து இருக்காது. அப்படி எனில் அண்ணாமலை ஏன் இப்படி கூறுகிறார் என்றால், அவர் ஊடக வெளிச்சத்தில் இருக்க விரும்புகிறார். ஒரு நேரேட்டிவை செட் பண்ண முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.