ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தையின்போது அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் சிறைக்கு செல்லட்டும் என்று ராமதாஸ் ஆவேசமாக கூறிவிட்டார் என்று அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலின் தற்போதைய நிலவரம் குறித்தும், ராமதாசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் சி.என்.ராமமூர்த்தி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் பாமகவின் தலைவராக இருப்பேன். தேர்தலுக்கு பின்னர் ராமதாசிடம் கட்சியை கொடுப்பதாக சொல்லி இருந்தார். இந்நிலையில், தற்போது தான் இருக்கும் வரை பாமகவின் தலைராக தொடர்வதாக திடீரென அறிவித்துள்ளார். இந்த மாற்றத்துக்கு காரணம் என்றால், ராமதாசின் பேச்சை கேட்டு அவர் பின்னால் சென்றால், அவருக்கு அடுத்தபடியாக அன்புமணியிடம் தான் கட்சி செல்லும். அப்போது தாங்கள் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் அன்புமணியின் பின்னால் சென்றுவிட்டார்கள். அதனால் கட்சியினரை தக்க வைப்பதற்காக தனது இறுதிக்காலம் வரை பாமகவின் தலைவராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். ராமதாஸ், அன்புமணியால் பெரிதும் பாதிக்கப்பட்டு கட்சியில் இருந்து வெளியேறியவர்களை எல்லாம் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறார். முன்னாள் இளைஞரணி செயலாளராக இருந்த ராஜேஸ்வரி பிரியா, திருமால்வளவன் போன்றவர்கள் எல்லாம் போய் பார்த்துள்ளனர்.
அரசியலில் வாரிசு என்று யாரும் கிடையாது என்று ராமதாஸ் சொல்கிறார். அதனால் ஏற்கனவே பொறுப்பு வகித்த கோ.க.மணியை, அவர் பாமகவின் தலைவராக நியமிக்கலாம். பாமகவின் பொதுச்செயலாளர் பொறுப்பு பட்டியல் இனத்தை சேர்ந்த வடிவேல் ராவணனுக்கு வழங்கப்பட்டது. அவர் தங்குவதற்கு தைலாபுரம் வீட்டில் சின்ன அறை கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு 10 மாதங்களாக சம்பளம் தரவில்லை. தேனியில் இருந்து வேலைபார்க்கும் அவரை பார்த்தால், தகவல் சொல்லுங்கள் என்கிறார். அவரும் டீக்கடையில் உட்கார்ந்து டீ சாப்பிடுகிறேன். நான் எப்போதும் எளிமையாகவே இருக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். தனது உடைமைகளை எடுத்து வருவதற்காக தேனிக்கு சென்ற வடிவேல் ராவணனை, மதுரை அழைத்துச்சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை பனையூருக்கு கூட்டிச் சென்றார்கள் என்று ராமதாஸ் சொல்கிறார்கள்.
அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தி இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால் கடைசி நேரத்தில் சவுமியா, பாஜகவிடம் பேசி கூட்டணியை உறுதிசெய்திவிட்டார். அதிமுக உடன் கூட்டணிக்கு செல்லக்கூடாது என்று திமுகவிடம் பணம் வாங்கினார் அன்புமணி. 3 இடங்களில் பெற்ற பணத்தையும் அவரே வைத்துக்கொண்டார். அன்புமணிக்கு, அவரது மகள்களையும் அரசியலுக்கு கொண்டு வரும் எண்ணம் உள்ளது. அன்புமணியின் 2வது மகள் சம்யுக்தா, சவுமியா தான் இவற்றை எல்லாம் செய்கிறார்கள். தற்போது ராமதாசுக்கு மாதந்தோறும் செலவுக்கு பணம் தருகிறேன். வீட்டில் கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருங்கள் என்று அன்புமணி சொல்கிறார். அவர் கட்சியை கைப்பற்றுவதற்கு கடந்த 7 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார். தன்னை நடைபிணம் ஆக்கிவிட்டு, நடைபயணம் செல்வதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அன்புமணி தான் பசுமை தாயகம் தொடக்க நாளில் தான் பயணத்தை தொடங்குவதாகவும், நவம்பர் 1ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்வதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி போன்றர்கள் ராமதாசிடம் போய் சமாதானம் பேசினார்கள். அப்போது, அன்புமணியை ராஜ்யசபா எம்.பி ஆக ஆக்கி, மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்குவதாக சொன்னார்கள். ஆனால் அன்புமணி சிறைக்கு போகட்டும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். என்றைக்கு, அன்புமணி தனது தாயாரை தாக்கினாரோ அப்போதே ராமதாஸ் முடிவு செய்துவிட்டார். அன்புமணியின் சகோதரிகளின் கணவர்கள் மெடிக்கல், கேஸ் ஏஜெண்சி போன்றவற்றை வைத்திருந்தார்கள். ஆனால் அவற்றை எல்லாம் காலி செய்ய சொல்லிவிட்டார். அவர்கள் எல்லாம் தற்போது அன்புமணியின் பின்னால் போய்விட்டார்கள். பாமக இரண்டாக உடைந்தால் அன்புமணிக்கு சின்னம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் 2009க்கு பின்னர் கட்சியின் அங்கீகாரம் போய்விட்டது. இது பலருக்கும் தெரியாது. மாம்பழ சின்னத்தை பிற கட்சிகள் கேட்காததால் அவர்களுக்கு தருகிறார்களே தவிர, அந்த கட்சிக்கு தற்போது மாம்பழ சின்னமும் கிடையாது.
ராமதாஸ் இதுவரை 30 தேர்தல்களை சந்தித்துள்ளார். அதில் கூட்டணியில் இருந்த காலத்தில்தான் அரசியலில் அவர்களுக்கு பலன்கள் எல்லாம் கிடைத்தது. கூட்டணி இல்லை என்கிறபோது ஒன்றும் கிடைக்கவில்லை. தற்போதைய நிலையில் கூட்டணியில் இடங்களும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. யாருடன் கூட்டணிக்கு பேச வர வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கே தெரியும் என்று சொல்கிறார். அப்போது தன்னிடம்தான் கூட்டணிக்கு பேச வருவார்கள் என்று சொல்கிறார். பாமக எம்எல்ஏக்கள் 5 பேரில் 3 பேர் அன்புமணியிடம் உள்ளனர். சமூகநீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு மதிமுகவை சேர்ந்தவர். அவர் 2000-க்கு பிறகுதான் பாமகவுக்கு வந்தார். காடுவெட்டி குருவை கைது செய்கிறபோது அவருக்கு ஜாமின் வாங்கித் தருவதற்காக வந்தவர். ஆனால் அன்புமணி, பாலுவை நீக்கியது செல்லாது என்று சொல்கிறார். சட்டப்படி அது நிற்காது.
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம கடந்த மே மாதத்தோடு நிறைவடைந்து விட்டது. தற்போது புதிய தலைவரை தேர்வு செய்ய, பொதுக்குழுவை கூட்டியாக வேண்டும். பாமக தற்போது ராமதாஸ் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. புதிய தலைவராக வேறு ஒருவரை நியமித்து விடுவார். ராமதாஸ் முன்னர் பாமக நிறுவனர் என்று அறிக்கை வெளியிட்டார். அன்புமணியுடன் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து நிறுவனர், தலைவர் என்கிற பெயரில் அறிக்கைகள் வருகிறது. அன்புமணி முதலில் பனையூரில் இருந்து அறிக்கைவிட்டார். கட்சி விதிகளின் படி திலகபாமா, பொருளாளராக செயல்பட முடியாது. அதனால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சையது மன்சூர் உசேனை பொருளாளராக நியமித்தார். பின்னர் கட்சியின் ஆடிட்டரை கூப்பிட்டு, கட்சியின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க உத்தரவிட்டார். அன்புமணி பாமக தலைமை கழகத்தில் இருந்து அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். தற்போது அதுவும் நின்றுவிட்டது. அன்புமணியின் பழைய வீட்டின் முகவரியில் தான் அறிக்கை வருகிறது. அப்போது, அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடிகளை ராமதாஸ் தரப்பில் செய்யப்பட்டே வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.