Homeசெய்திகள்கட்டுரைமீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி! அதிரடி ஆட்டத்துக்கு தயாராகும் திமுக!

மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி! அதிரடி ஆட்டத்துக்கு தயாராகும் திமுக!

-

- Advertisement -

தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்கொள்ளும் விதமாக முதலமைச்சர் மாற்றி அமைத்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் அதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அமைச்சரவை மாற்றம் விவகாரத்தில் திமுக ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளது. பொன்முடி நீக்கம் என்பதை அவ்வளவு எளிதாக திமுக எடுத்துவிட்டதா என்கிற கேள்வி எழுகிறது. உண்மையில் பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்யவே விரும்பவில்லை. பின்னர் ஆ.ராசாவை அனுப்பிதான் ராஜினாமாவை அனுப்பிதான் ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். பொன்முடி ஒரு வித்தியாசமான நபர் ஆவார். திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து மேலே வந்தவர். அவருடைய தவறான பழக்க வழக்கங்கள் தவறாக கொண்டுபோய் விட்டன. இலவச பேருந்து பயண திட்டத்தை ஓசியில் போகிறீர்கள் என்று சொன்னது நாக்கொழுப்பின் உச்சக்கட்டமாகும். அதேபோல் தற்போது சைவத்தையும், வைணவத்தையும் கிண்டல் செய்து அந்த காலத்து மேடைகளில் பேசுவதை பொன்முடி பேசுகிறார். அதை பேசுவதற்கான தேவை என்பது நேரடியாக பெண்களை இழிவுபடுத்தக்கூடிய விஷயமாகும்.

அதுமட்டுமின்றி இன்று நீதித்துறை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.  நீங்கள் எதையும் பேசிவிட்டு ஒதுங்கி போய்விட முடியாது. முதல்வரை அவதூறு ஆக பேசி விட்டார்கள் என்று எத்தனை பாஜகவினர் கைது செய்யப்படுகிறார்கள். அப்படி இருக்கிற போது நீங்கள் பேசும்போதே எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சு நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகிறபோது, கட்சியின் தலைமையே கண்டம் தெரிவிக்கிறது. அப்போது அவர் அமைச்சராக தொடர்வதற்கான எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை. அவருடைய துணைப் பொதுச் செயலாளர் பதவியே பறிக்கப்பட்டிருக்கிறபோது அடுத்ததாக அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது எல்லோருக்குமான எச்சரிக்கையாகும். மேடைகளில் பேசுகிறபோது எந்த அளவுக்கு பேச வேண்டும். இன்றைய கால கட்டத்தில ஒவ்வொருவர் கையிலும் கேமரா உள்ளது. சமூக வலைதளங்கள் பெருகியுள்ள சூழலில், யாருடை தவறும் எங்கும் மறைக்கப்படாது. எல்லாம் சமூகவலைதளங்களில் வந்து விவாதிக்கப்படுகிறது. அதற்கான தாக்கம் சமூகத்தில் மிக பிரம்மாண்டமான அளவில் உள்ளது.

ponmudi minister

செந்தில் பாலாஜிக்கும் மீண்டும் அமைச்சர் பொறுப்பு கிடைக்கும். ஏனென்றால் செந்தில் பாலாஜியை பதவியை ராஜினாமா செய்கிறீர்களா? அல்லது ஜாமினை ரத்து செய்யவா என்று உச்சநீதிமன்றம் கேட்க வேண்டிய தேவை கிடையாது. ஆனால் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் ராஜினாமா செய்துவிட்டார் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். அதோடு சேர்த்து அவர் பெட்டிஷன் ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சட்டப்பிரிவு 21ன் கீழ் பிணை பெற்ற ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டின் முதலமைச்சராக உள்ளார். அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக உள்ளார்.

இன்றைக்கு நாடு முழுவதற்கும் ஒரு லட்சம் பேருக்கு மேலாக பிஎம்எல்ஏ வழக்கு உள்ளது. அவர்கள் யாரும் பதவியில் இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை இருக்கும்? அதே நேரத்தில் பாஜகவுக்கு போய்விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. கேள்வி என்ன என்றால் இதுபோன்று உள்ளவர்களின் பதவிகளை நீங்கள் பறிப்பீர்களா? இதை பெட்டிஷனாக பைல் செய்துள்ளார். இதை அரசமைப்பு சட்ட கேள்வியாக வைத்து திமுக வழக்கு தொடர உள்ளது. ஏன் செந்தில் பாலாஜி விடுதலையின்போது அவர் அமைச்சர் பதவியில் தொடரக்கூடாது என்று சொல்லவே இல்லை. செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடவில்லை. ஒரு நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வரவில்லை… அதற்கு செந்தில் பாலாஜி காரணம் என்று ஒரு நுணுக்கமான காரணத்தை சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுவதற்கு காரணம் கோவை மாநகராட்சி தேர்தலில் 95 இடங்களை திமுக வென்றது. நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை, முருகன் தோற்றார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய இடங்களில் பாஜக வெல்ல வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்புகிறார்கள்.  செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊடகங்களில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து அண்ணாமலை அமித்ஷாவிடம் சொல்லி,  அவரை கைதுசெய்து அவ்வளவு கஷ்டப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்றார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி பொறுப்பிலும் இருக்கக்கூடாது. வெளியிலும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடர்ந்தார்கள். அதை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது. செந்தில் பாலாஜியை மீண்டும் உள்ளே தள்ள வேண்டும். அதற்கான விஷயங்களுக்கு எந்த எந்த வகையில் தயாராக வேண்டுமோ அதை செய்து வருகிறார்கள்.

செந்தில் பாலாஜி மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாஸ்மாக் வழக்கில் அவரை கைதுசெய்ய திட்டமிடுகிறார்கள். மேலும் முதலமைச்சரையும் கைதுசெய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வரை வழக்கு நீளும். மோடி அரசு வந்து இதுவரை 190 வழக்குகள் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 2 வழக்குகளில்தான் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்படவில்லை. அமலாக்கத்துறையை வைத்து மத்திய அரசு திமுகவை அச்சுறுத்துகிறது. இன்னும் பல அமைச்சர்கள் சிக்குவார்கள். திமுகவுக்கு எதிராக முதலமைச்சர் வரை அவர்கள் குறிவைக்கிறார்கள். இது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பின்னர் நடைபெறுகிற விஷயங்களாகும். திமுகவினர் மீது அனைத்து விதமான வழக்குகளையும் போடுவார்கள். அவை எல்லாம் ஒருநாள் தலைப்பு செய்தியாக முடிந்துவிடும். இதை திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.

ஆவின் பாலின் தரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வரமாட்டார் என்றார்கள். வெளியே வந்துவிட்டார். அமைச்சராக இவ்வளவு நாளாக இருந்தார். தற்போது ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் அவர் அமைச்சராக வருவார். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் பாஜகவின் இரண்டாவது களமாகும். அதனால் கன்னியாகுமரியை சேர்ந்த ஒரே எம்எல்ஏ ஆன மனோ தங்கராஜுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க சட்டமன்ற தேர்தலுக்கான விஷயமாகும். ஐ.பெரியசாமி, பி.டி.ஆர் போன்றவர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க பாஜக- அதிமுக கூட்டணியை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு ஆகும், இவ்வாறு  அவ்வாறு தெரிவித்தார்.

MUST READ