spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஜூன் - 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?

ஜூன் – 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?

-

- Advertisement -

 என். கே. மூர்த்தி

ஜூன் - 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?

we-r-hiring

மக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் கட்சியை கைப்பற்ற பெரும் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் பரவுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் கூவத்தூர் கூத்துகள், தர்ம யுத்தம் என்று பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் அதிமுக என்ற மாபெரும் கட்சி படிப்படியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் சென்றது. ஆனாலும் அந்த தலைமையை அவர் நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வாரா அல்லது கோட்டை விட்டு விடுவாரா? இதுதான் தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருக்கும் முக்கியமான கேள்வி.

மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாகவே தெரிவித்தார்

ஏன் இந்த கேள்வி? மக்களவை தேர்தலில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸூம்  பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்கள். அந்த கூட்டணியில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். அதை தேனி நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக என்ற கட்சி தேர்தலுக்கு பின்னர் டி.டி.வி.தினகரனிடம் வந்துவிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாகவே தெரிவித்தார். அந்த கருத்தை மையமாக வைத்துதான்  தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், அச்சத்திற்கும் காரணம்.

நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்பாளர்கள் தேர்வில் அக்கட்சியின் சீனியர் லீடர்கள் (senior leader ) யாரையும் கலந்து ஆலோசிக்க வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மீது மன வருத்தத்தில் சில தலைவர்கள் உள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பிரச்சினை என்று தகவல் வருகிறது. ஈரோடு, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் கூட வேட்பாளரை தேர்வு செய்ததில் செங்கோட்டையனை அழைத்து ஆலோசனை நடத்தவில்லை என்று கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று எடப்பாடியருக்கு எதிராக வேலுமணி களம் இறங்க உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.

டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸூம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்கள்

அதிமுக தொடர்பாக வருகின்ற அனைத்துச் செய்திகளுக்கும் திரை மறைவில் இருப்பது சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் என்கிற ஒரு சிறிய குழு தான் காரணம் என்று சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும். இவை அனைத்தும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற  நம்பிக்கையின் அடிப்படையில் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தற்போது வடமாநிலங்களில் பிஜேபிக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, பீகார், அரியானா, அசாம் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அப்படியே பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது சாத்தியமே இல்லை. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 225 தொகுதிகள் வரை வெற்றி பெறும். இந்த நிலையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போது அதிமுக போன்ற ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகளின் தயவு மோடிக்கு தேவைப்படும். அந்த வகையில் காங்கிரஸ், பிஜேபி என்று எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அதிமுக விற்கும் அதன் தலைமைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

MUST READ