spot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்ஆனி மாத ராசி பலன் 2025: மிதுனத்தில் 12 ஆண்டுக்குப் பின் இணையும் கூட்டணியால்...

ஆனி மாத ராசி பலன் 2025: மிதுனத்தில் 12 ஆண்டுக்குப் பின் இணையும் கூட்டணியால் யாருக்கு யோகம்

-

- Advertisement -

சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் குரு உடன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பயணிக்கும் ஆனி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

we-r-hiring

தனுசு: சூரியன் ஏழாமிடத்தில் குரு பகவானுடன் இணைந்து பயணம் செய்வதால் அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்படும். குரு பகவானின் பார்வையால் பணவருமானம் அதிகரிக்கும். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரிகளின் உதவி கிடைக்கும். சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு மரியாதை கூடும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வர நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

மகரம் : சூரியன் ஆறாம் வீட்டில் குரு, புதனுடன் இணைந்து பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் வீடு மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை, ஊக வணிகம் சிறப்படையும் கல்வி நிலை மேன்மையடையும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை யாருக்கும் பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

கும்பம் : சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் குரு பகவானுடன் இணைந்து பயணம் செய்வதால் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். உங்களுடைய பூர்வீக பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். குரு பகவானின் பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். தேவையற்ற இடங்களில் கடன் வாங்குவதை தவிர்க்கவும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் கவனம் தேவை.

மீனம் : சூரியன் நான்காம் வீட்டில் குரு பகவானுடன் பயணம் செய்வதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் பண வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

MUST READ