Homeசெய்திகள்ஆன்மீகம்சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது

-

- Advertisement -

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்து வருகின்றனர். கோடைக்கால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ம் தேதி காலை 10-மணிக்கு வெளியிடுகிறது
திருப்பதி தேவஸ்தானம்

இதனால் சில மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபாடு செய்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள இருபத்தொன்பது அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் பன்னிரெண்டு மணி நேரம் காத்திருந்து சாமி வழிபாடு செய்தனர்.

முந்நூறு ரூபாய் டிக்கெட்டை பெற்ற பக்தர்கள் சுமார் 2மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க  மாதங்களுக்கான கட்டணம் ரூ.முந்நூறு சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் இருபத்தி நான்காம் (புதன் கிழமை) தேதி காலை பத்து மணிக்கு வெளியிடுகிறது.

பக்தர்கள் இதைக் கவனித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in-ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமியை வழிபாடு செய்யலாம். மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 85,297 பக்தர்கள் சாமியை வழிபாடு செய்தனர். இதில் 37,392 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை இரவு எண்ணப்பட்டுள்ளது இதில் ரூ.3.71 கோடி காணிக்கையாக கிடைத்தது என்பது குறிக்கப்பட்டுள்ளது.

MUST READ