Homeசெய்திகள்ஷேக் ஹசீனா அரசில் 1400 பேர் கொலை- யூனுஸ் ஆட்சியில் ​​இந்துக்கள் டார்கெட்: வங்கதேசத்தின் கொடூரம்

ஷேக் ஹசீனா அரசில் 1400 பேர் கொலை- யூனுஸ் ஆட்சியில் ​​இந்துக்கள் டார்கெட்: வங்கதேசத்தின் கொடூரம்

-

- Advertisement -

கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள், அதைத் தொடர்ந்து முகமது யூனுஸின் இடைக்கால அரசின் போது நடந்த வன்முறைகள் குறித்த தனது அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் சமர்ப்பித்துள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைக் குறைத்து மதிப்பிட முகமது யூனுஸ் அரசின் முயற்சிகளை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.அதே நேரத்தில், ஷேக் ஹசீனா அரசு இருந்தபோது மாணவர் இயக்கத்தை அடக்கியதற்காக கடுமையான மனித உரிமை மீறல்களுக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2024 மாணவர் இயக்கத்தின் போது குறைந்தது 1,400 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை செப்டம்பர் 16, 2024 அன்று தொடங்கிய விசாரணையை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவர்கள், ஆயுத நிபுணர்கள், பாலின நிபுணர்கள், ஊடகங்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் அடங்கிய குழுவால் தயாரிக்கப்பட்டது.

புதன்கிழமை வெளியான அறிக்கை, ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கின் தலைவர்கள், இந்துக்கள், அஹ்மதியா முஸ்லிம்கள், சிட்டகாங் மலைப்பகுதிகளின் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து கவலையை எழுப்பியுள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் கீழ் மத சிறுபான்மையினரின் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அறிக்கை கூறியது. இந்துக்கள், அகமதியா முஸ்லிம்கள், பழங்குடியினரும் வன்முறைக்கு பலியாகியுள்ளனர்.

மாணவர் இயக்கம் தொடங்கிய பின்னர் பெரும்பாலான மக்கள் வங்காளதேச பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 12-13 சதவீதம் பேர் குழந்தைகள். எழுச்சியின் ஆரம்ப நாட்களில், அவாமி லீக் அரசு 150 பேர் இறந்ததாக ஒப்புக்கொண்டது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசின்பாதுகாப்பு, உளவுத்துறை அமைப்புகளே சட்டவிரோதக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது.

போராட்டங்களை அடக்குவதற்கான ஒரு உத்தியின் ஒரு பகுதியாக, அரசியல் தலைமை, மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவு, ஒருங்கிணைப்பு, வழிகாட்டுதலுடன் நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகள், பெரிய அளவிலான தன்னிச்சையான கைதுகள், தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் நடத்தப்பட்டதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறினார்.

அந்த அறிக்கை, மக்கள் மீது மிக அருகில் இருந்து சுடப்பட்ட சம்பவங்களையும் வெளிப்படுத்தியது. உடல் ரீதியான தாக்குதல், கற்பழிப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பாலின அடிப்படையிலான வன்முறையை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு எழுச்சியின் தியாகிகளில் ஒருவரும் மாணவர் தலைவருமான அபு சயீத், காவல்துறையினரால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அறிக்கை கூறியது.

MUST READ