spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர் பலி

சென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர் பலி

-

- Advertisement -

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி கழண்டு விழுந்ததில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் காண்ட்ராக்டில் வேலை செய்து வரும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு(62) என்பவர் இன்று மதியம் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி உள்ளார்.

சென்னை GH ஊழியர் பலி

we-r-hiring

அப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டவர் 2, மூன்றாவது மாடியில் இருந்து ஏசி கழண்டு  திருநாவுக்கரசு தலையில் விழுந்து உள்ளது.
தலையில் பலமாக அடிபட்டதால் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த திருநாவுக்கரசை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

சென்னை GH ஊழியர் பலி
அவசர சிகிச்சை பிரிவில் திருநாவுக்கரசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ