- Advertisement -
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 53,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக 400 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் வரை உயர்ந்து 6, 720 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் வரை விலை உயர்ந்து 53,760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து, 92 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, 92 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
