Homeசெய்திகள்சென்னைபூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகை, செல்போன்கள் மீட்பு: எழும்பூர் ரயில்வே போலீசாரின் நேர்மைக்குத் தம்பதி...

பூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகை, செல்போன்கள் மீட்பு: எழும்பூர் ரயில்வே போலீசாரின் நேர்மைக்குத் தம்பதி நன்றி!

-

- Advertisement -

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட 2 சவரன் நகைகள் மற்றும் செல்போன்கள் அடங்கிய கைப்பையைக் கண்டெடுத்த ரயில்வே போலீசார், முறையான விசாரணைக்குப் பின் பொன்னேரியைச் சேர்ந்த தம்பதியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.பூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகை, செல்போன்கள் மீட்பு: எழும்பூர் ரயில்வே போலீசாரின் நேர்மைக்குத் தம்பதி நன்றி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரத் குமார். இவர் தனது மனைவியுடன் பழைய நகைகளை மாற்றுவதற்காக மின்சார ரயிலில் நேற்று சென்னை சென்ட்ரல் வந்துள்ளார். அங்கிருந்து தி.நகர் செல்வதற்காகப் பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்த தம்பதியினர், மீண்டும் மின்சார ரயிலில் ஏறிச் சென்றுள்ளனர்.

we-r-hiring

ரயில் நிலையத்தில் தவறவிட்ட கைப்பை
ரயிலில் பயணித்தபோது, பரத் குமாரின் மனைவி தான் கொண்டு வந்த கைப்பையைப் பூங்கா ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். அந்தப் பையில் 2 சவரன் தங்க நகை, இரண்டு செல்போன்கள் மற்றும் ₹500 பணம் ஆகியவை இருந்தன.பூங்கா ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகை, செல்போன்கள் மீட்பு: எழும்பூர் ரயில்வே போலீசாரின் நேர்மைக்குத் தம்பதி நன்றி!

ரோந்துப் போலீசாரின் விரைவான நடவடிக்கை
இதற்கிடையே, பூங்கா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், அனாதையாகக் கிடந்த அந்தப் பையைக் கண்டெடுத்து உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தனர்.

உரியவர்களிடம் ஒப்படைப்பு
கைப்பையைத் தவறவிட்ட பரத் குமார் தம்பதியினர் புகார் அளிப்பதற்காக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையிலும், பையில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்ததிலும் அது அவர்களின் பைதான் என்பது உறுதியானது. இதையடுத்து, முறையான ஆவணங்களைச் சரிபார்த்து, மீட்புக் கைப்பையைத் தம்பதியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இழந்த நகையும் செல்போன்களும் பாதுகாப்பாகக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த பரத் குமார் தம்பதியினர், எழும்பூர் ரயில்வே போலீசாருக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணைப்படி வழங்குவது சலுகையே தவிர உரிமை அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

MUST READ