Homeசெய்திகள்சென்னைசென்னையின் விமான நிலைய எதிர்காலம் கேள்விக்குறி? தெளிவான நீண்டகால Master Plan தேவை - கே.இ....

சென்னையின் விமான நிலைய எதிர்காலம் கேள்விக்குறி? தெளிவான நீண்டகால Master Plan தேவை – கே.இ. ரகுநாதன் கவலை!

-

- Advertisement -

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய சென்னை விமான நிலைய விரிவாக்கம் (Terminal 5), அதன் இயக்க முறையை மாற்றுவது குறித்த கோரிக்கைகள் மற்றும் அடுத்தடுத்து வரும் முரணான அறிவிப்புகள் தமிழகத்தின் விமானப் போக்குவரத்து எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையின் நலன் கருதி சென்னைக்கு தெளிவான, ஒருங்கிணைந்த நீண்டகால ‘Aviation Master Plan’ ஒன்றை அரசு வெளியிட வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ. ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னையின் விமான நிலைய எதிர்காலம் கேள்விக்குறி? தெளிவான நீண்டகால Master Plan தேவை - கே.இ. ரகுநாதன் கவலை!

மாறிவரும் அறிவிப்புகளும் எழும் கேள்விகளும்

சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்துப் பல்வேறு குழப்பமான சூழல் நிலவுவது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள முக்கியக் கேள்விகள் மற்றும் கவலைகள்:

we-r-hiring
  • தற்போதைய விமான நிலைய விரிவாக்கம்: சில வாரங்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போதைய சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவது குறித்தும், புதிய ‘Terminal 5’ மற்றும் ‘Terminal 3’ மூலம் இதன் பயணியர் கையாளும் திறனை (Capacity) 55 மில்லியன் பயணிகளாக உயர்த்தப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

  • இயக்குநர் (Operator) மாற்றம் குறித்த கடிதம்: ஒருபுறம் விரிவாக்கப் பணிகள் பேசப்படும் அதேவேளையில், விமான நிலைய ஆணையத்திற்குப் (AAI) பதிலாக வேறு ஒரு பிரைவேட் ஆபரேட்டரை (Private Operator) கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  • நீண்டகாலக் கொள்கை குழப்பம்: சென்னை விமான நிலையமே நீண்ட காலத்திற்கு முக்கிய விமான நிலையமாக இருக்கப் போகிறது என்றால், அதன் இயக்க முறையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அல்லது மற்றொரு புதிய மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தால், இப்போது தற்போதைய விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு ஏன் இவ்வளவு முதலீடுகள் செய்யப்பட வேண்டும்?

தெளிவான Master Plan அவசியத்தின் தேவை

இத்தகைய தனித்தனி அறிவிப்புகளால் முதலீட்டாளர்களுக்கும், தொழில்துறைக்கும், லாஜிஸ்டிக்ஸ் (Logistics) துறைக்கும் கொள்கை ஸ்திரத்தன்மை (Policy Stability), தெளிவு மற்றும் தொடர்ச்சி பாதிக்கப்படுவதாக ரகுநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒவ்வொரு சில வாரங்களுக்கும் வெவ்வேறு திசைகளில் அறிவிப்புகள் வெளியாகும் U-turn தோற்றம் உருவாகக் கூடாது. ஒவ்வொரு விமான நிலைய முடிவையும் தனித்தனியாகப் பார்க்கும் அணுகுமுறையை விட்டுவிட்டு, சென்னையின் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகால வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சிக்குத் தேவையான ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த Master Plan-ஐ அரசு வகுக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கும் உலகத்தரமான இணைப்பிற்கும் தெளிவான வான்வழிப் போக்குவரத்துக் கொள்கை (Aviation Policy) மிகவும் அவசியம்” என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டிய நிலை இருப்பது வருத்தமளிக்கிறது: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேதனை!

MUST READ