புரட்டாசி மாதம் விரத நாட்கள் தொடர்வதால் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.
பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் மற்றும் விடுமுறை தினமான இன்று கிருத்திகை விரத நாட்களில் தொடர்வதால் காசிமேடு மீன் சந்தை வழக்கத்தை விட மீன் பிரியர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
விடுமுறை தினங்களில் திருவிழா போன்று களைகட்டும் காசிமேடு மீன் சந்தை மீன் பிரியர்கள் கூட்டம் இல்லாததால் களையிழந்து காணப்பட்டது
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் ஒரு மாதம் விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டுமே சமைப்பார்கள்.இதனை தொடர்ந்து முருகனுக்கு விசேஷமான புரட்டாசி கிருத்திகை நட்சத்திரம் இன்று கடைப்பிடிப்பதால். பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்ப்பார்கள்.
விடுமுறை தினத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து திரும்பிய நிலையில் பெரிய வகை மீன்கள் மற்றும் சிறிய வகை மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்பட்டது. மீன்களின் விலையானது கடந்த வாரத்தை விட சற்று குறைவாக விற்பனை செய்யப்பட்டன.
வஞ்சிரம்1000 விற்பனை செய்யப்பட்டவை 850 ரூபாய் விற்பனை செய்யப்படுகின்றன
கடந்த வாரம் கொடுவா 900 விற்பனை செய்யப்பட்டது. தற்போது 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஷீலா 500 விற்பனை செய்யப்பட்டவை தற்போது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
பால் சுறா 500 விற்பனை செய்யப்பட்டவை, தற்போது 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
சங்கரா 600 விற்பனை செய்யப்பட்டவை தற்போது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
பாறை 600 விற்பனை செய்யப்பட்டவை, தற்போது 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இறால்-400 விற்பனை செய்யப்பட்டவை இன்று 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
காணங்கத்தை -300 விற்பனை செய்யப்பட்டவை 250
கடமா- 350 விற்பனை செய்யப்பட்டவை 250
நெத்திலி,-100
கடந்த வாரத்தை விட 100, 50 ரூபாய் என மீன்கள் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன
விலை குறைந்தாலும் வழக்கமான கூட்டம் இல்லாமல் காசிமேடு வெறிச்சோடி காணப்படுகிறது.