சென்னை நீலாங்கரை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் செருப்பு வீச்சு குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் வீட்டின் மீது செருப்பு வீசிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை.தமிழக வெற்றி கழகத்தின் தொடக்க விழா இரண்டாம் ஆண்டு இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை நீலாங்கரை பனையூரில் உள்ள விஜய் அவரது இல்லத்தின் வாயிலில் இளைஞர் ஒருவர் குழந்தைகள் அணியும் காலனி ஒன்றை கையில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் கையில் வைத்திருந்த காலனியை வீட்டில் உள்ளே வீசினார். இதனை பார்த்த விஜய் வீட்டின் காவலாளிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் செருப்பு வீசிய அந்த நபரிடம் விஜய் வீட்டு காவலாளிகள் பேசுகையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் விஜய் அவரது வீட்டில் இருந்து புறப்பட இருந்த நேரத்தில் அவர் வீட்டில் முன்பு இளைஞர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் வீட்டின் மீது காலணி வீசிய சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடமான விஜய் வீட்டின் அருகே வந்தனர்.
செருப்பு வீசிய நபர் அங்கேயே சுற்றி திரிந்த நிலையில் அவரிடம் சென்று பேச்சு கொடுத்து பார்த்தனர் வீட்டின் மீது எதற்காக செருப்பு வீசினாய் என கேள்வி எழுப்பினர் அதற்கு விஜய் பட பாடல்களை பாடி போலீசார் கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதிலளித்தார். பிறகு அவர் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் துணிகளை பிடுங்கி கீழே வீசினார்.
பிறகு நீலாங்கரை காவல் நிலைய உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து பிறகு அந்த நபரை இருசக்கர வாகனத்தில் அமர்த்தி நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செருப்பு வீசிய நபர் கைது செய்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது தன்னுடைய பெயர் மணி என்றும் கேரள மாநிலம் மலப்புறம் பகுதி சேர்ந்தவர் வேண்டும் தெரிவித்தார். பிறகு விஜய் வீட்டின் மீது செருப்பு வீசியது குறித்து கேட்கும் பொழுது நான் எதற்காக செருப்பு வீசினேன் என்றால் கவனயீர்ப்புக்காக செருப்பை வீசினேன் குறிப்பாக தமிழ்நாட்டில் சிறு குழந்தைகள் ,சிறுவர்கள் ,செருப்பு அணியாமல் இருக்கிறார்கள் என்பதால் அதனை கவனம் கொள்ளும் வகையில் செருப்பை வீசினேன் என தெரிவித்தார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் EMS மகன் என்றும் தெரிவித்தார்.
காவல் நிலையம் அழைத்துச் சென்று நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது சென்னைக்கு படம் நடிப்பதற்காக வந்ததாகவும் திரும்பத் திரும்ப கூறி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விஜய் பட பாடல்களை பாடிவரும் நிலையில் அவர் விஜய் ரசிகராக இருக்கக்கூடும் எனவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை நேரில் பார்வை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்