Homeசெய்திகள்சென்னைசென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்

-

- Advertisement -

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி – ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR) சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. அதுவும் சென்னை பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயில் மற்றும் திருநின்றவூர் வரை காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு 2004 முதல் 2009 வரை கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது பாடி மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பாடி முதல் திருவள்ளூர் வரை உள்ள 4 வழிச்சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தினார். ஆனால் அப்போது வியாபாரிகள் சங்கத்தினர் கடுமையாக எதிர்த்ததால் நின்றுபோனது.

தற்போது மீண்டும் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆவடி அருகே பட்டாபிராம் முதல் திருநின்றவூர் வரை 13,218 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலங்களை நெடுஞ்சாலைத்துறை எடுக்க முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றுக் கருத்து உள்ளவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கக் கூடியவர்கள், ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் 03-02-2025 அன்று திருவள்ளூரில் உள்ள தனி வட்டாட்சியர் (நி.எ-2) அலுவலகத்தில் ஆவணங்களுடன் சென்று கருத்து தெரிவிக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

MUST READ