கைதி 2 படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அப்டேட் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் நடிகர் கார்த்தி. அதை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தற்போது சர்தார் 2, வா வாத்தியார் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர், டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதே சமயம் கைதி 2 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் கார்த்தி.
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் லோகேஷ், நடிகர் கார்த்தியை வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தார். சாம்.சி.எஸ் – இன் பின்னணி இசையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஆனால் கார்த்தியும், லோகேஷ் கனகராஜும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூலி படத்தை முடித்த லோகேஷ், அடுத்ததாக கைதி 2 படத்தை எடுக்க போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, “லோகேஷ் கனகராஜ் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கைதி 2 படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். கார்த்தி, தமிழ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறார். அதன் பிறகு கைதி 2 தொடங்கும்” என்று அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தான் தொடங்கும்….. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!
-
- Advertisement -