Homeசெய்திகள்சினிமாஎன் தந்தைக்கு அவரும் ஒரு பிள்ளை! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் வந்து நெகிழவைத்த பிரபு

என் தந்தைக்கு அவரும் ஒரு பிள்ளை! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் வந்து நெகிழவைத்த பிரபு

-

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை கடலென திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல, திரையுல, பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். விஜயகாந்தின் உடல் இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணி வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்பின்னர், தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.

மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த விஜயகாந்த் உடல்!

 

இந்நிலையில், தீவுத்திடலில் உள்ள விஜயகாந்த் உடலுக்கு தனது குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் பிரபு, விஜயகாந்த் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, என் தந்தை சிவாஜி கணேசன் இறந்தபோது, நான் ஊரில் இல்லை. அப்போது மகனாக இருந்து நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் முன் நின்று செய்தார் விஜயகாந்த். என் தந்தை சிவாஜிக்கு அவரும் ஒரு பிள்ளை தான். அதனால் தான் என் அண்ணன் விஜயகாந்துக்கு நான் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளேன். தமிழ் மக்கள் மற்றும் திரையுலகம் என எல்லா இடத்திலும் அவரை பிடித்தவர்கள் மனதில் என் அருமை நண்பர் விஜயகாந்த் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். மேலும், கேப்டன், கேப்டன் என அவர் கோஷமிட்டதை பார்த்து ரசிகர்கள் கண் கலங்கினர்.

MUST READ