நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை கடலென திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல, திரையுல, பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். விஜயகாந்தின் உடல் இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணி வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்பின்னர், தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.