நடிகர் விஜய் தற்போது தி கோட்(THE GREATEST OF ALL TIME) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே சென்னை, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் 2024 செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சமீபத்தில் நடிகர் விஜய் சென்னை கொரட்டூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் பின்னர் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவிற்காக தான் அந்த சாய்பாபா கோவிலை கட்டியுள்ளதாக இணையத்தில் பல தகவல்கள் தீயாய் பரவி வந்தன.
விஜயின் அம்மா ஷோபா சாய்பாபாவின் தீவிர பக்தை என்றும் அவரின் ஆசையை நிறைவேற்ற நடிகர் விஜய் சாய்பாபா கோவிலை கட்டியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதேசமயம் கடந்த பிப்ரவரி மாதம் அந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜய் புதிதாக கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அவருடன் இணைந்து விஜயின் தாய் ஷோபாவும் வந்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.