Homeசெய்திகள்சினிமாவேட்டையன் படப்பிடிப்பில் இழுபறி... ரஜினி படங்களுக்கு பாதிப்பு..

வேட்டையன் படப்பிடிப்பில் இழுபறி… ரஜினி படங்களுக்கு பாதிப்பு..

-

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ் பெற்றவர் டிஜே ஞானவேல். இவர் அடுத்ததாக வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், ராணா டகுபதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார், லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, புதுச்சேரி, ஆந்திரா, என மாறி மாறி நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் ரிலீஸ் என அறிவித்த பின்பும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது மே 15-ம் தேதிக்கு மேல் தான் படப்பிடிப்பு முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஞானவேல் ரஜினிகாந்திடம் 4 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், நடிகர் ரஜினிகாந்த் ஞானவேல் மீது அப்டெட்டில் உள்ளாராம்.

கூலி படத்திற்கான புரோமோ ஷூட் என அத்திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் தயாராகி வரும் நேரத்தில், தற்போது வேட்டையன் படத்திற்கு கால்ஷீட் கேட்டிருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் கூலி படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

MUST READ