ராமர் கோயில் குடமுழுக்கு விழா… பாலிவுட் நட்சத்திர தம்பதிக்கு அழைப்பு…
- Advertisement -
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி அலியா பட் மற்றும் ரன்பீர் கபூருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 22-ம் தேதி குமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கக்கோரி நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி குடமுழுக்கு விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்குக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான அலியா பட் மற்றும் ரன்பீர் கபூருக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து பாலிவுட்டின் மற்ற தம்பதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளன.