கடவுளோடு பேசுவேன்.. தங்கலான் படம் குறித்து பார்வதி பேச்சு…
- Advertisement -
தங்கலான் திரைப்படம் குறித்து பிரபல மலையாள நடிகை பார்வதி பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஒரு மதில் சுவரும், அதை சுற்றி நடக்கும் அரசியலையும் அசராமல் திரையில் காட்டி ரசிகர்களை அசரடித்தார். இதையடுத்து, ரஜினியை வைத்து காலா மற்றும் கபாலி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களை எடுத்தார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் பா ரஞ்சித் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. படம் குறித்து பேசிய பார்வதி, படத்தில் நான் கங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் நான் கங்கம்மாவாக வாழ்ந்தேன். வேற்று உலகத்தில் கடவுளோடு பேசும் கதாபாத்திரம் அது என அவர் தெரிவித்தார்.