நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தென்னிந்திய திரை உலகில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019ல் கிஸ் என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். இந்த படத்தில் ஸ்ரீலீலா நடனமாடி இருந்த ‘மடத்தப்பட்டி’ பாடல் பட்டி தொட்டி எங்கிலும் ஹிட் அடித்தது. இன்னும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்ரீலீலாவுக்கு நலங்க வைப்பது போன்று இருக்கிறது. அதேசமயம் அவர், “மிகப்பெரிய நாள்” .. “விரைவில்” என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இதன் மூலம் நடிகை ஸ்ரீலீலாவிற்கு நிச்சயதார்த்தமா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்வா? என்று ரசிகர்கள் குழப்பமாகியுள்ளனர். இருப்பினும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.