Homeசெய்திகள்சினிமாகோலிவுட்டில் கொடிகட்டிய பிறகு பாலிவுட் பக்கம் செல்லும் த்ரிஷா... டாப் நடிகருக்கு ஜோடி...

கோலிவுட்டில் கொடிகட்டிய பிறகு பாலிவுட் பக்கம் செல்லும் த்ரிஷா… டாப் நடிகருக்கு ஜோடி…

-

கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நடிகை த்ரிஷா அடுத்ததாக பாலிவுட் திரை உலகில் நடிக்க உள்ளார். முதல் படத்திலேயே சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் ‘ஏக் தா டைகர்’ படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சல்மான் கான் டைகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய அளவில் பேசப்பட்ட டைகர் எனும் பெயரை வைத்து 2017ல் ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற படமும் வெளியானது. தற்போது இதன் மூன்றாம் பாகமாக டைகர் 3 திரைப்படம் மணிஷ் ஷர்மா இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்தை யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதில் சல்மான் கான் உடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த கத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி உலகம் முழுவதும் வெளியானது. மராட்டிய மாநிலத்தில் டைகர் படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள், திரையரங்கில் பட்டாசுகளை வெடிக்க வைத்தனர். இதனால், திரையரங்கில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதில், ஒன்று தி புல். இப்படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்து த்ரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. விஷ்ணு வர்தன் இயக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் கரண்ஜோகர் தயாரிக்கிறார். வரும் 2025-ம் ஆண்டு இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ