Homeசெய்திகள்சினிமாகணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ...

கணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ…

-

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிவதாக தொடர்ந்து வதந்திகள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைந்திருக்கும் வீடியோ வெளியானது.

உலக அழகி பட்டத்துடன் இந்திய சினிமாவில் ஐஸ்வர்யா ராய் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்தியில் பல்வேறு நாயகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஐஸ்வர்யா ராய்.

அவர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பு, சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். நடிப்பு மட்டுமன்றி அவ்வப்போது மாடலிங் துறையிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணாக ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியானது. அபிஷேக் பச்சனின் அக்கா மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் தி ஆர்ச்சிஸ் படத்தின் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் குடும்பத்துடன் பங்கேற்றார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ